சென்ன‍ை: சேப்பாக்கம் இரண்டாவது டெஸ்ட்டில், தனது முதல் இன்னிங்ஸை இரண்டாம் நாளில் ஆடிவரும் இங்கிலாந்து அணி, தேநீர் இடைவேளையின்போது 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

இதுவரையான நிலவரப்படி, அந்த அணியின் பென் ஃபோக்ஸ் மட்டுமே அதிகபட்சமாக 23 ரன்களை அடித்து நாட்அவுட்டாக இருக்கிறார். அந்த அணியில் இதுவரை 4 பேட்ஸ்மென்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்துள்ளனர்.

இந்தியாவின் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அக்ஸார் படேலுக்கு 2 விக்கெட்டுகளும், இஷாந்த் மற்றும் சிராஜுக்கு தலா 1 விக்கெட்டும் கிடைத்துள்ளன.