சென்னை: சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவையில் இரவுப நேரம் மட்டும் சிறு மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தாம்பரம் யார்டில் பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில், தாம்பரம் யார்டில் பொறியியல் பணி நடக்க உள்ளதால், சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இரு மார்க்கத்தில் தலா இரண்டு மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன என ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதன்படி,  சென்னை கடற்கரை – தாம்பரத்துக்கு இன்று (அக்டோபர் 4ந்தேதி ) முதல் அக்டோபர் 17-ம் தேதி வரை இரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், மற்றும் இதே  தடத்தில் அக்டோபர்  8-ம் தேதி முதல் அக்டோபர்  15-ம் தேதி வரை 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய இரண்டு மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன.

தாம்பரம் – சென்னை கடற்கரைக்கு அக்டோபர் 4ந்தேதி தேதி முதல் அக்டோபர்  17-ம் தேதி வரை இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், மற்றும் இதே தடத்தில் அக்டோபர் 8-ம் தேதி முதல் அக்டோபர்  15-ம் தேதி வரை இரவு 11.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய இரண்டு மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.