சென்னை:
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள 458 பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்கு 1 லட்சத்து ஆயிரம் பேர் விண்ணப்பித்த நிலையில், 1 லட்சத்து 14 ஆயிரம் பேர் மட்டுமே சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தனர். கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்த நிலையில், தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது.

 

சென்னையில் நாளை மாலை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தரவரிசை பட்டியலை வெளியிடுகிறார். நடப்பு கல்வியாண்டில், கலந்தாய்வு மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 458 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 877 இடங்கள் நிரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.