சென்னை:
பொறியியல் கல்லூரி கலந்தாய்வு வரும் ஜூலை 2ம் தேதி தொடங்க உள்ளது என்று உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பொறியியல் கல்லூரி கலந்தாய்வு வரும் ஜூலை 2ம் தேதி தொடங்க உள்ளது என்றும் ஆகஸ்ட் 2ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு மாதம் முன்னதாகவே நடைபெற உள்ளது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பாலிடெக்னிக் படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறினார்.