சென்னை:
மிழ்நாடு, புதுச்சேரியில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், இயல்பு நிலையிலிருந்து வெப்பநிலை 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.