சென்னை: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தொகுதிகள் வாரியாக  யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அப்போது, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படுகிறது. இந்த மனுக்கள் குறித்து ஆய்வு செய்ய 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

மோடியை 3-வது முறையாக பிரதமராக்க தமிழக மக்களின் ஆதரவை பெறும் நோக்கத்தில் “என் மண், என் மக்கள் யாத்திரை”  தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் ‘என் மண், என் மக்கள் யாத்திரை செல்ல உள்ளது.  “என் மண், என் மக்கள்” யாத்திரை மொத்தம் 1,700 கிலோ மீட்டர் கால்நடையாகவும், 900 கிலோ மீட்டர் வாகனத்திலும் நடைபெறுகிறது. மொத்தம் 5 கட்டங்களாக 168 நாட்கள் “என் மண், என் மக்கள்” யாத்திரை நடைபெறும். மக்கள் வசிக்கும் பகுதிகளில் கால் நடையாகவும், மக்கள் வசிக்காத பகுதிகளில் வாகனத்திலும் யாத்திரை நடைபெறுகிறது. இதில், மொத்தம் 1,700 கிலோ மீட்டர் கால் நடையாகவும், 900 கிலோ மீட்டர் வாகனத்திலும் யாத்திரை நடைபெறுகிறது.

பல்வேறு கட்டங்களாக நடைபெறும் இந்த யாத்திரையின் முதல்பகுதி கடந்த ஜூலை 29-ம் தேதி தொடங்கப்பட்டது.  “என் மண், என் மக்கள்” யாத்திரை தொடக்க நிகழ்ச்சியை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். முதல்கட்ட யாத்திரை ஆகஸ்டு 22ந்தேதி முடிவடைந்தது. இதையடுத்து 2வது கட்ட யாத்திரை செப்டம்பர்  2-ந்தேதி தேனியில் தொடங்குகிறது. 3-ம் கட்ட பாத யாத்திரை அக்டோபர் மாதம் திருப்பூரில் தொடங்கி தஞ்சாவூரில் நிறைவடைகிறது.

இதற்கிடையில், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது  முதல்கட்ட பாத யாத்திரையின்போது,  ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு சென்றார். அப்போது பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெறுவதற்காக புகார் பெட்டிகளும் கொண்டு செல்லப்பட்டன. இந்த புகார் பெட்டிக்கு இதுவரை  1000-க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் வந்துள்ள என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, அந்த புகார் மனுக்களை ஆய்வு செய்யும் பணிக்கு  30 பேர்  நியமனம் செய்து மாநில பாஜக தலைமை அறிவித்து உள்ளது. இந்த  இந்த குழுவினர் மனுவை பார்த்து சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்பு கொண்டு விசாரித்து தேவைப்படும் கூடுதல் ஆவணங்களையும் கேட்டு பெற்று ஆவண செய்வார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளத.

இந்த மனுக்களில், உண்மை தன்மை இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும் க்நும்,  இந்த ஆய்வு முடிந்ததும் தகுதியான மனுக்கள் கட்சியின் சம்பந்தப்பட்ட பிரிவு அணிகள் மூலம் அரசின் துறைகளிடம் வழங்கப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.