சென்னை: சென்னை மெட்ரோவுல அம்மா ஜெயலலிதா பெயரை நீக்கிட்டாங்க, இருட்டடிப்பு செய்றாங்க என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,   2011ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, Chennai Metro Rail Limited (CMRL) என்று அழைக்கப்படும், சென்னை மெட்ரோ ரயில் லிட், – கட்டம் 1-ன் பணிகளை விரைவாக நடத்தி முடிக்க ஆணையிட்டார்கள். அதன்படி, மெட்ரோ ரயில் பணிகள் குறித்த காலத்தில் நடைபெற்று வந்தது. மேலும், வட சென்னை மக்களின் கோரிக்கையினை ஏற்று, திருவொற்றியூர் ! விம்கோ நகர் வரையிலான விரிவாக்கத் திட்டத்திற்கு 23.7.2016 அன்று அடிக்கல் நாட்டினார்கள்.

21.9.2016 அன்று சென்னை விமான நிலையம் – லிட்டில் மவுண்ட் வரையான முதல் மெட்ரோ போக்குவரத்தினை, ஜெயலலிதா துவக்கி வைத்தார்கள்.

14.5.2017 அன்று திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்தை முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

25.5.2018 அன்று நேரு பூங்கா முதல் சென்னை சென்ட்ரல் வரையும், மற்றும் சைதாப்பேட்டை முதல் ஏஜி-டி.எம்.எஸ். வரையான மெட்ரோ ரயில் போக்குவரத்தை துவக்கி வைத்தேன்.

10.2.2019 அன்று ஏஜி-டிஎம்.எஸ். முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்தை துவக்கி வைத்தேன். இத்துடன் சென்னை மெட்ரோ இரயில் கட்டம் 1-ன், ரூ.18,380 கோடி மதிப்பீட்டில் 45.1 கி.மீ நீளத்திலான பணிகள் முடிவடைந்தன.

திருவொற்றியூர் – விம்கோ நகர் வரையிலான பெட்ரோ இரயில் கட்டம்-1-ள் நீட்டிப்பு வழித் தடத்தினை 14.02.2021 அன்று  பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன்படி, 3,770 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 9.051 கினே மீட்டர் நீட்டிப்பு பணிகள் முழுமையடைந்து மெட்ரோ ரயில் கட்டம்-1 மக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக வந்தது.

21.11.2020 அன்று உள்துறை அமைச்சர் முன்ளிலையில், சென்னை மாநகரின் புறநகர் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக, 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118.90 கி.மீ. நீளத்திலான சென்னை மெட்ரோ இரயில் கட்டம் – 2 திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்கள்.

இவ்வாறு Chennai Metro Rail Limited (CMRL) என்று அழைக்கப்படும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனப் பணிகள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின், ஜெயலலிதா ஆட்சியிலும், தொடர்ந்து எனது தலைமையிலான அரசிலும் விரைவுபடுத்தப்பட்டு, குறித்த காலத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது என்றால் அது மிகையல்ல.

ஆனால், இந்நிறுவனம் கடந்த சில நாட்களாக ஜெயலலிதாவின் பெயரை இருட்டடிப்பு செய்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் இறங்குவதற்கு வசதியாக, ஒவ்வொரு நிறுத்தம் வருவதற்கு முன்பும், அந்த நிறுத்தத்தின் பெயரை அறிவிப்பு செய்வது வழக்கம். சென்ற வாரம் வரை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ நிறுத்தம் வரும்போது தமிழக அரசு சூட்டிய புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம்” என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அந்த நிறுத்தத்தின் பெயரை முழுமையாக அறிவிப்பு செய்து வந்தது.

ஆனால் கடந்த சில நாட்களாக மெட்ரோ ரயில் நிர்வாகம், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ நிறுத்தம் வரும்போது புட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலிதா பேருந்து நிலையம் என்று அறிவிப்பு செய்யாமல் பேருந்து நிறுத்தம்” என்று மட்டுமே அறிவிப்பு செய்கிறது. தமிழக அரசு சூட்டிய பெயரை மெட்ரோ ரயில் நிர்வாகம் முழுமையாக அறிப்பு செய்வதில்லை. ஜெயலலிதாவின் பெயரை இருட்டிப்பு செய்து வருவது கடும் கண்டனத்திற்குரியது” என எடப்பாடிபழனிசாமி தெரிவித்துள்ளார்.