சென்னை:
னி பட்ஜெட் மூலம் வேளாண்மைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டமன்றத்தில் இன்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு தலைவர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவிக்கையில், தனி பட்ஜெட் மூலம் வேளாண்மைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் வேளாண்மைக்கென மொத்தம் ரூ.33,007 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு விவசாயிகள் நலன்சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.