சென்னை:
டெல்லியிலிருந்து சென்னை புறப்பட்ட இண்டிகோ விமானம் என்ஜின் பழுதானதால் டெல்லியிலேயே அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் இருந்து ஏர்பஸ் ஏ321 நியோ என்ற விமானம் 230 பயணிகளுடன் நேற்று இரவு 9.46க்குப் புறப்பட்டது.

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் என்ஜினில் பழுது ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இரவு 10.39 மணிக்கு மீண்டும் டெல்லியிலேயே அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.