அசாம் மாநிலத்தில் யானைகள் அவ்வப்போது பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்வது வழக்கம்.

ஆனால் தேஜ்பூரில் பாகனுடன் வந்த ஒரு யானை பானி பூரி கடைக்கு வந்து கப்பு கப்பென்று கோல் கப்பா எனும் பானிபூரியை வாங்கி சாப்பிட்டது.

இது அங்கிருந்த பானி பூரி பிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு யானை பசிக்கு பானி பூரியா என்று கிண்டலடிக்கவும் வைத்துள்ளது.