சென்னை:

மிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் ஏப்ரல் 18ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவுக்கு பெரும்பாலான பள்ளிகள் உபயோகப்படுத்தப்படும் நிலையில்,  1 முதல் 9-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஏப். 10-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது.

17வது மக்களவை உருவாக்கும் வகையில் நாடு முழுவதும் நாடாளுமன்ற  தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 7கட்டங்களை நடைபெறும் இந்த தேர்தல், ஏப்ரல் 11ந்தேதி தொடங்கி மே மாதம் 19ந்தேதி வரை முடிவடைகிறது. மே மாதம் 23ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஏப்ரல் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேர்தல் பணிகளுக்கு ஆசிரியர்கள் ஏராளமானோர் ஈடுபடுத்தப்படுவதாலும், வாக்குப்பதிவு, வாக்குப்பெட்டிகளை வைப்பதற்கு பள்ளிகளை உபயோகப்படுத்திய வேண்டியதிருப்பதாலும்,  பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடைபெறும் பொதுத்தேர்வுகளை முன்கூட்டியே நடத்த  பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தற்போது தமிழகத்தில் 10வது, 11வது, 12வது தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த மாதம் முதலிலேயே மற்ற வகுப்புகளுக்கு தேர்வுகளை நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில்,  1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு களை ஏப்ரல் 10-க்குள் முடிக்கவும் தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் இப்போது தீவிரமாக நடைபெற்று வருவ தாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதுபோல, பிளஸ்-2 விடைத்தாள்  திருத்தும் பணிகள் வரும் 30-ம்தேதி தொடங்கி ஏப். 6-ம் தேதியுடன் முடிகிறது. தொடர்ந்து மதிப்பெண்கள் அடங்கிய குறுந்தகடுகளை ஏப். 9-க்குள் தேர்வுத்துறை இயக்குநரகத்திடம் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஒப்படைக்க வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இன்று தொடங்கி உள்ள 10ம்வகுப்பு பொதுத்தேர்வு   விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்.2-ம் தேதி தொடங்கி ஏப்.13-க்குள் முடிக்க தேர்வுத்துறை  அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.