டில்லி

ந்திய தேர்தல் ஆணையம் ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தல் தேதியை மாற்றி அறிவித்துள்ளது.

விரைவில் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அதற்கான தேர்தல் தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்து இருந்தது.

இதில் மிசோரம் மாநிலத்திற்கு நவம்பர் 7 ஆம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெறும் எனவும் சத்தீஷ்கர் மாநிலத்திற்கு நவம்பர் 7 மற்றும் 17 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

மேலும் மத்தியப்பிரதேசத்திற்கு நவம்பர் 17 ஆம் தேதியும், ராஜஸ்தானுக்கு நவம்பர் 23 ஆம் தேதியும், தெலுங்கானாவுக்கு நவம்பர் 30 ஆம் தேதியும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த. 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது ராஜஸ்தானில் சட்டசபைத் தேர்தலை மாற்றியமைத்து இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, நவம்பர் 25 ஆம் தேதி அன்று ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.