மராவதி

ந்திர முன்னாள் முதல்வர்  சந்திரபாபு நாயுடுவுக்கு அமராவதி உள்கடட்ட சாலை முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், மாநில ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 9-ஆம் தேதி கைது செய்தனர். அவர் தற்போது நீதிமன்றக் காவலில், ராஜமகேந்திரவரம் மத்தியச் சிறையில் உள்ளார்.

ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு அமராவதி உள்வட்ட சாலை மோசடி வழக்கு மற்றும் அங்கல்லு கலவர வழக்கில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்., இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது .  அந்த மனுவை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் வரும் 16 ஆம் தேதி வரை சந்திரபாபு நாயுடுவைக் கைது செய்யக்கூடாது என இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

மேலும் அங்கல்லு கலவர வழக்கிலும் நாளை வரை யாரையும் கைது செய்ய வேண்டாம் என்றும் ஆந்திரா சிஐடிக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், சிஐடி விஜயவாடா ஏசிபி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த உள்வட்ட சாலை மோசடி வழக்கில் பிடிவாரண்டை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.