திருச்சி:

மிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு, திருச்சி அருகே உள்ள தனியார் கல்லூரியில் இன்று காலை 10 மணி அளவில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில்,  திமுக நிர்வாகிகள். திமுக முதன்மைச் செயலாளர் கே. என். நேரு, பொருளாளர் துரைமுருகன் ,  ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், டி கே எஸ். இளங்கோவன, பூண்டி கலைவாணன்,இளைஞர் அணிச் செயலாளர் உதயந்தி ஸ்டாலின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, மு. கருணாநிதி ஆகியோரின் படங்களுக்கு தலைவர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.

மாநாட்டை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் திமுக முதன்மைச்  செயலாளர் கே.என்.நேரு  வரவேற்று பேசினார். தொடர்ந்து முக்கிய தலைவர்கள் பேசியதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.