சென்னை

சென்னை எழும்பூர் நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ரயில் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. ஆகவே, பல்வேறு வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

நேற்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,

”சென்னை எழும்பூரில் இருந்து வரும் மே 2, 9, 16, 23, 30 மற்றும் ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) காலை 5.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரயில் (வண்டி எண்.06067) அதேநாள் மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமாா்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து இதே தேதிகளில் மதியம் 2.50 மணிக்குப் புறப்பட்டு வரும் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06068) அதேநாள் இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். 

இதேபோல, சென்னை எழும்பூரில் இருந்து வரும் மே 3, 4, 5, 10, 11, 12, 17, 18, 19, 24, 25, 26,31 மற்றும் ஜூன் 1, 2, 7, 8, 9, 14, 15, 16, 21, 22, 23, 28, 29, 30 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) காலை 5.15 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும் வந்தே பாரத் சிறப்பு ரயில் (06057) அதேநாள் மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, இதே தேதிகளில் நாகர்கோவில் இருந்து மதியம் 2.50 மணிக்குப் புறப்பட்டு வரும் வந்தே பாரத் சிறப்பு ரயில் (06058) அதேநாள் இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரயில் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும்.” 

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.