செங்கல்பட்டு:
னைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை’ என்பதே அரசின் இலக்கு என்று வேலைவாய்ப்பு முகாமில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வண்டலூரில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  இந்த விழாவில் பேசிய அவர், ஆட்சிக்கு வந்த பின் 36 பெரிய வேலைவாய்ப்பு முகாம்கள், 297 சிறிய முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும், 41 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது, இதில் 513 பேர் மாற்று திறனாளிகள் என்பது பெருமை என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசுப் பணி போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பள்ளி, கல்லூரி கல்வியை மேம்படுத்தி விரும்பும் வேலைக்கு மாணவர்களை தயார் படுத்தி வருகிறோம் என்றும் கூறினார்.