புதுடெல்லி:
டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கட்சி நிலவும் உட்கட்சி பிரச்சனை காரணமாக பிரதமர் மோடியை சந்திப்பதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இப்படிப்பட்ட சூழலில் இன்று அவர், காலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேச இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசுவதற்கு பாஜக மேலிடம் அனுமதி கொடுத்ததால் அவரின் ஆதவாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

மேலும் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து கட்சியின் சின்னம் தொடர்பாக ஒரு மனு கொடுக்க இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.