டில்லி

சிவசேனா எம் பி சஞ்சய் ராவத் மீதான ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் அவர் மனைவிக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் மும்பை கோரேகாவ் பத்ரா சால் குடிசை சீரமைப்பு மோசடி வழக்கில், ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக முறைகேடு நடந்ததாகக் கூறப்படுகிறது.  இது குறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மற்றும் அவர் மனைவி வர்ஷா ராவத்தின் மீது அமலாக்கத் துறை பல முறை குற்ற, கூறி வந்தது. ஆனால் வர்ஷாவை விசாரணைக்கு ஆஜராகும்படி இதுவரை கூறவில்லை.  தற்போது அமலாக்கத்துறை விசாரணைக்குச் சம்மன் அனுப்பி உள்ளது,

கடந்த 4 மாதங்களுக்கு முன் பதரா சால் திட்டத்தின் ரூ.1,000 கோடி ஊழல் குற்றச்சாட்டின்பேரில், வர்ஷா ராவத் மற்றும் சஞ்சய் ராவத்தின் கூட்டாளிகள் 2 பேர் ஆகியோரின் ரூ.11 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி இருந்தது. இவற்றில் வர்ஷாவுக்கு சொந்தமான தாதர் நகரில் உள்ள பிளாட் ஒன்றும் அடங்கும்.

தவிர சஞ்சய் ராவத் நண்பர் சுஜித் பட்கர் மனைவி ஸ்வப்னா பட்கருடன் கூட்டாக வாங்கப்பட்ட அலிபாக்கில் உள்ள 8 பிளாட்டுகளும் முடக்கப்பட்டன.  ஸ்வப்னா பட்கர் இந்த வழக்கில் தற்போது முக்கிய சாட்சியாகி உள்ளார்.   ஆனால் கடந்த மாதம் ஸ்வப்னா பட்கருக்கு பாலியல் துன்புறுத்தல் மிரட்டல் மற்றும் கொலை மிரட்டல் விடப்பட்டு உள்ளது.

இதற்கும் தனக்கும் எந்தவித தொடர்புமில்லை என சஞ்சய் ராவத் கூறியுள்ளார். இன்று நீதிமன்றத்தில் அமலாக்க துறை முறையிடும்போது, பத்ரா சால் திட்ட முறைகேட்டில் ஈடுபடுவதற்காக, சஞ்சய் ராவத்தின் குடும்பத்தினர் ரூ.1 கோடி வரை பெற்று உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

இவற்றை மறுத்துள்ள சஞ்சய் ராவத் தம்மைக் காற்று வர கூட வசதியின்றி, ஜன்னல் கூட இல்லாத அறையில் வைக்கப்பட்டு இருந்ததாகவும் ஆனால், அமலாக்க துறை தன்னை குளிரூட்டப்பட்ட அறையில் வைத்திருந்தது என கூறியுள்ளது என நீதிமன்றத்தில் குற்றச்சாட்டாகக் கூறியுள்ளார்.