புதுடெல்லி

மோடியின் சர்க்கை பேச்சு குறித்து கருத்து கூற தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்று எஞ்சிய 6 கட்ட தேர்தல் வரும் ஜுன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மொத்தம் 25 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.  கடந்த 19 ஆம் தேதி முதற்கட்டத் தேர்தல் நடைபெற்ற நிலையில் 2 ஆம் கட்ட தேர்தல் வரும் 26 ம் தேதி நடைபெற உள்ளது. எனவே அரசியல் கட்சியினர் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  நேற்று ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

அப்போது பிரதமர் மோடி,

“முன்னதாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நாட்டின் சொத்தில் முதல் உரிமை இஸ்லாமியர்களுக்கு உள்ளது என்றனர். அப்படியென்றால் இந்தச் சொத்துக்கள் யாருக்குப் பகிர்ந்து அளிக்கப்படும். இந்த சொத்துக்கள் அதிகக் குழந்தைகளைப் பெற்றவர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும். ஊடுருவல்காரர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும். உங்களின் கடின உழைப்பால் கிடைத்த பணம் ஊடுருவல்காரர்களுக்குச் செல்ல வேண்டுமா? இதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?” 

என்று கூறினார்.

மோடியின் பேச்சு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசுவதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

இன்று தலைமைத் தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த=போது அவரிடம் ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேசிய கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்குப் பதிலளித்த தலைமைத் தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர், இந்த விவகாரத்தில் கருத்து கூற விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.