சென்னை

சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை மாற்றத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

கடந்த 2019 மற்றும் 2021 ஆம் வருடத் தேர்தல்களில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது.  இம்முறை தேர்தல் ஆணையத்திடம் தாமதமாக விண்ணப்பித்ததால் தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் சீமான் கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை.

எனவே நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. வேறு ஒரு கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டதால் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது.

ஆனால் மைக் சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்திடம் மின்னஞ்சல் வாயிலாகக் கோரிக்கை வைத்தனர். சீமான் படகு அல்லது பாய்மர படகு சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தார்.

வேறு சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற சீமானின் கோரிக்கையை இந்தியத் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. கட்சிக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள மைக் சின்னத்திலேயே போட்டியிடுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.