டில்லி

ருணாசலப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அருணாசலப் பிரதேச மாநிலம் பங்கின் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது.   இன்று அதிகாலை 1.02 நிமிடத்துக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதியப்பட்டுள்ளது.   இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்பட்டதாகத் தகவல்கள் வரவில்லை.

சரியாக 10 நிமிடங்கள் கழித்து மணிப்பூர் மாநிலத்தில் ஷிருய் என்னும் சிற்றூரில் அதிகாலை 1.22 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இது ரிக்டர் அளவு கோலில் 3.6 ஆக பதியப்பட்டுள்ளது.   10 நிமிடங்களில் அடுத்தடுத்து இரு மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.