சென்னை: தமிழகத்தில் வரும் 17ந்தேதி முதல் இ-பாஸ் விண்ணப்பிப்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ள தமிழக அரசு,  வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ பாஸ் நடைமுறை தொடரும் என கூறி உள்ளது.
கொரோனா பரவலை  கட்டுப்படுத்த தமிகம் உள்பட பல மாநிலங்கள் இபாஸ் நடைறையை கொண்டு வந்தன. ஆனால், தற்போது பாதிப்பு தமிழகத்தில்  ஓரளவுக்கு கடடுப்படுத்தப்பட்டு உள்ளதால், இபாஸ் நடைமுறையை அகற்ற அரசியல்கட்சிகள் மற்றும் பொதுமக்களும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், வரும் 17ந்தேதி முதல்,  இ பாஸ் நடைமுறையில் இன்று தளர்வுகள் அறிவிக்கப்படுதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி,  இபாஸ் தேவைப்படுவோர், ஆதார் அட்டை, செல்போன் எண், ரேஷன் கார்டு கொடுத்து விண்ணப்பித்தல் உடனே  தங்கு தடையின்றி இபாஸ் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், தற்போது கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கு மட்டுமே என்றும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இது பொருந்தாது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
அதனை தொடர்ந்து வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்களுக்கு இப்போது இருக்கும் இ-பாஸ் நடைமுறை விதிமுறைகள் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.