சென்னை

கர்நாடகா எப்போதுமே தமிழகத்தின் கோரிக்கையை ஏற்றதில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

 

கர்நாடகா தமிழகத்துக்குக் காவிரி தண்ணீரை முறையாகத் திறந்து விடாத நிலையில் மத்திய அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. நேற்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் நேற்று சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

மத்திய அமைச்சர் தமிழகத்துக்குத் திருப்தி அளிக்கும் வகையில் பதில் சொல்லவில்லை. தற்போது 5 ஆயிரம் கன அடி தண்ணீரைத் திறந்துவிடக் கர்நாடகாவுக்குச் சொல்வதாகத் தெரிவித்தார். நாளை காவிரி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் கர்நாடக அரசு அவசர மனுவைத் தாக்கல் செய்து உள்ளது.

அமைச்சர் துரைமுருகன் இது குறித்து செய்தியாளர்களிடம்,

“காவிரி நீர் ஒழுங்காற்று குழுதான் கர்நாடக அணைகளில் தண்ணீர் இருக்கிறதா? இல்லையா? என்பதை உறுதி செய்ய வேண்டும். இதுவரை தமிழகத்தின் எந்த கோரிக்கையையும், கர்நாடக அரசு ஏற்றுக்கொண்டதில்லை. 

நாங்கள் காவிரி விவகாரம் தொடர்பாகத் தீர்ப்பாயம் அமைக்கலாம் என்று கூறியதை அவர்கள் மறுத்தார்கள்.

உச்சநீதிமன்றத்தின் மூலம் தான்  நாம் பெற்ற அனைத்து உரிமையும் பெறப்பட்டது. மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் தமிழகத்தின் கோரிக்கை குறித்து முறையிட்டுள்ளோம்” 

என்று கூறியுள்ளார்.