சென்னை
வரும் அக்டோபர் 9 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட உள்ளதாக சபாநாயக்ர் அறிவித்துள்ளார்.
இன்று தமிழக சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி அன்று தமிழக சட்டப்பேரவை கூடுவதாக அறிவித்துள்ளார்.
அப்பாவு,
‘ஆளுநரின் பணி சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது ஆகும். நாடாளுமன்றக் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுவது மரபு எனினும் அவர் அழைக்கப்படவில்லை.
அவரஒ புதிய நாடாளுமன்றமே கட்டிடத் திறப்பு விழாவிற்கும் அழைக்கவில்லை. மத்திய அரசு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா உடனடியாக அமலுக்கு வராது என மத்திய அரசு கூறியுள்ளது. வரும் அக்டோபர் 9 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது:
என்றார்.
இது குறித்து தமிழக சட்டமன்றப்பேரவை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
”தமிழக சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டத்தை 2023-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 9-ம் நாள் திங்கட்கிழமை காலை 10 மணிக்குத் தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டமன்றப்பேரவை மண்டபத்தில் பேரவைத்தலைவர் கூட்டியுள்ளார். அன்று 2023-24-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்பெறும்.
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.