துரை

ள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

பாஜக பொருளாதாரப் பிரிவு மாநிலத் தலைவராகப் பதவி வகித்து வரும் எம்.எஸ்.ஷா மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரியின் தலைவராக இருந்து வருகிறார். எம்.எஸ்.ஷா மீது 15 வயது பள்ளி மாணவி ஒருவரின் தந்தை, மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

புகாரில் தனது மகளின் செல்போனுக்கு, பா.ஜ.க. பிரமுகர் ஷாவின் செல்போன் எண்ணிலிருந்து இருந்து தொடர்ந்து ஆபாசமான உரையாடல்கள் வந்துள்ளதாகவும், இதையடுத்து தனது மகளிடம் கேட்டபோது, தனது மனைவி, மகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லாமல் அடிக்கடி தனியார் சொகுசு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று, பா.ஜ.க. பிரமுகருடன் தனியாக இருந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்அப் மூலமாக, நான் அழைக்கும் இடத்திற்கு வந்து என்னுடன் தங்கினால் பைக் வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தையைக் கூறி அழைத்துச் சென்று 15 வயது சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் எனவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

 

பள்ளி மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், பா.ஜ.க. நிர்வாகி எம்.எஸ்.ஷா மீதும், மாணவியின் தாய் மீதும் போக்சோ சிறப்பு சட்டம் 11(1), 11(4), 12 ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.