ஆறு சிறுவர்கள் மிரட்டல்.. தீக்குளித்த சிறுமி

பெண்களின் மீதான வன்முறை, குறிப்பாகச் சிறுமியர் மீதான பாலியல் குற்றங்களுக்கு மட்டும் நாட்டில் குறைவே இருக்காது போலிருக்கிறது.  இதோ அடுத்த சம்பவம் தூத்துக்குடி அருகேயுள்ள குளத்தூர் எனும் கிராமத்தில்.

இச்சிறுமி 11 வகுப்பு வரை படித்து பாதியில் படிப்பை நிறுத்தியவர்.  கடந்த 9-ம் தேதியன்று ஆறு சிறுவர்கள் போன் மூலமாக இவருக்கு அளித்த தொல்லை தாங்க முடியாமல் தீக்குளித்து விட்டார்.

இதுபற்றி இவர் வெளியிட்டிருந்த ஒரு நிமிட வீடியோவால் இந்த விசயம் வெளியே வந்துள்ளது.  கடந்த 8-ம் தேதி சரவணன் என்பவன் இச்சிறுமியை போனில் அழைத்து டாச்சர் செய்துள்ளான்.  போனை எடுக்கவில்லையென்றால் தொடர்ந்து வேறு வேறு நம்பர்களிலிருந்து அழைத்துத் திட்டியுள்ளான்.  ஒரு கட்டத்தில் தொல்லை தாங்காமல் சுவிட்ச் ஆஃப் செய்து விட அன்று இரவு, ஆறு சிறுவர்களுடன் வீட்டிற்கே வந்து தகராறு செய்துள்ளான் இவன்.

இதனைத் தொடர்ந்து இச்சிறுமியின் தாய் இவரைத் திட்ட, மனம் வெறுத்துப்போன சிறுமி தனகுதானே மண்ணெண்ணெய்யை ஊற்றி எரித்துக்கொண்டுள்ளார்.  சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினரால் காப்பாற்றப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 20% காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.

“அந்த பொண்ணால பேச முடியாததால, முதல்ல என்ன காரணம்னே கண்டுபிடிக்க முடியல.  அவங்க அம்மாவும் சரியா ஏதும் சொல்லல.  கடைசில அவங்க வெளியிட்ட வீடியோவை பார்த்து தான் விசயமே புரிஞ்சது.  இப்போ அந்த பசங்கள போஸ்கோல அரெஸ்ட் பண்ணி விசாரிச்சிட்டு இருக்கோம்.  பிசிகல் ஹராஸ்மென்ட் இல்லன்னாலும் போன் மூலமாக ரொம்ப தொல்லை பண்ணியிருக்கானுவ.  அதிலும் வீட்டுக்கு வந்து சத்தம் போட்டப்போ தண்ணியிடிச்சிருந்திருக்கானுவ.  கோவத்தில அவங்க அம்மா திட்டவும் மனசு வெறுத்து போய் இந்த பொண்ணு இப்டி பண்ணிடுச்சு” என று விவரிக்கிறார் தூத்துக்குடி எஸ்பி பாலகோபாலன்.

இது போன்ற பாலியல் கொடுமைகளிலிருந்து பெண் குழந்தைகளுக்கு என்று தான் விடுதலை  கிடைக்குமோ தெரியவில்லை

– லெட்சுமி பிரியா