திருவள்ளூர்

ராமரிப்பு மற்றும் பழுது காரணமாக வட சென்னை அனல் மின் நிலையத்தில் 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின்நிலையம் அமைந்துள்ளது.  இங்கு முதலாவது நிலையின் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட், 2வது நிலையின் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் என மொத்தம் 1830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

சில நாட்களுக்கு முன் 2வது நிலையில் உள்ள முதல் அலகில் கொதிகலன் குழாய் கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.  தற்போது 2வது நிலையின் 2வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணி காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு வடசென்னை அனல் மின்நிலையத்தில் ஒரே நேரத்தில் பராமரிப்பு மற்றும் பழுது காரணமாக 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அதிகாரிகள் பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததும் மின் உற்பத்தி சீராகும் எனத் தெரிவித்தனர்.