சென்னை

சென்னை வண்ணாரப்பேட்டையில் சில பராமரிப்பு  பணிகள் நடப்பதால் சில மின்சார ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளது.

நேற்று தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் காணப்படுவதாவது :

தொடர்ந்து பராமரிப்பு பணிகள் பயணிகள் பாதுகாப்பு மற்றும் ரயில்களின் இயக்கத்தைக் கருத்தில்கொண்டு நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் வண்ணாரப்பேட்டை யார்டில் இன்று (13-ம் தேதி) இரவு 11.30 மணி முதல் நாளை அதிகாலை 3.30 மணி வரையில் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கவுள்ளது.

எனவே, சில மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – அரக்கோணம் இடையே நாளை அதிகாலை 1.20 மணி ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும் அரக்கோணம் – வேளச்சேரிக்கு நாளை அதிகாலை 4 மணி முதல் ரயில் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு இயக்கப்படும்.