சென்னை

ரடங்கு காரணமாக தமிழக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் கடந்த 3 மாதங்களில் ரூ.175 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக மக்கள் கூட்டமாகக் கூடுவது தடை செய்யப்பட்டது.  அதையொட்டி பல கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி நிறுத்தப்பட்டது.   அதைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட  ஊரடங்கு காரணமாகக் கோவில்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.   இதில் தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து கோவில்களும் மூடப்பட்டுள்ளன.

இந்து அறநிலையத் துறையின்கீழ் 44,121 கோவில்கள் உள்ளன.  இவற்றில் ஆண்டு வருவாய் ரூ 10 லட்சத்துக்கு மேல் வரும் கோவில்கள் 234 ஆகும்.  ரூ. 2 முதல் ரூ.10 கோடி வரை வருமானம் உள்ள கோவில்கள்  557 மற்றும் ரூ.10000 முதல் ரூ,2  லட்சம் வரை வருமானம் வரும் கோவில்கள்  3402 ஆகும்.  இவற்றில் சொத்துக்கள் மூலம் வரும் வருவாய், உண்டியல் தரிசன டிக்கட்டுகள் பிரசாத விற்பனை என ஆண்டுக்கு ரூ.600 கோடி வருவாய் அரசுக்குக் கிடைத்து வந்தது

தற்போது விழாக்காலம் என்பதால் கடந்த 3 மாதங்களில் பழனி முருகன் கோவிலில் ரூ.50 கோடியும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தலா ரூ.40 கோடி திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூ.30 கோடி, திருத்தணி முருகன் கோவிலில் ரூ.20 கோடி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரூ.5 கோடி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ரூ.1 கோடியும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ரூ.75 லட்சம் என மொத்தம் ரூ.175 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.