புதுச்சேரி

நாளை தொடங்க இருந்த புதுச்சேரி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புக்களுக்கான பள்ளி திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சென்ற வருடம் மார்ச் முதல் நாடெங்கும் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன.   அனைத்து மாநிலங்களிலும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.   இதன்பிறகு இரண்டாம் அலை கொரோனா பரவலால்  பள்ளிகள் திறப்பது தள்ளிப்போனது.   புதுச்சேரி மாநிலத்திலும் இதே நிலை ஏற்பட்டது.

தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் புதுச்சேரியில் செப்டம்பர் 1 முதல் 9,10,11, மற்றும் 12 ஆம் வகுப்புக்களுக்குப் பள்ளிகளும் கல்லூரிகளும் தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன.  கொரோனா பரவல் மேலும் குறைந்துள்ளதால் வரும் நவம்பர் 8 அதாவது நாளை முதல் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புக்கள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது கனமழை பெய்து வருகிறது.    இதனால் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரிகளும் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   அதையொட்டி நாளை தொடங்க இருந்த 1 முதல் 8 ஆம் வகுப்புக்களுக்கான பள்ளிகள் திறப்பு இரு தினங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.