ராஞ்சி

டும் பனிமூட்டம் காரணமாக ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஜ்சியில் 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

கடந்த சில நாட்களாக வட இந்திய மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.  அதாவது டில்லி, பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டி எடுத்து வருவ்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. எனவே ஜார்கண்டில் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 2 நாட்களுக்கு பனிப்பொழிவு நீடிக்கும் எனவும்  வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று ராஞ்சி விமான நிலையத்தில் கடும் பனிமூட்டம் காரணமாக 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தவிர  2 விமானங்கள் வேறு விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டன. இவ்வாறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.