சென்னை

ரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாகக் கோவை – நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்படுகிறது.

தற்போது நாகர்கோவில் – கன்னியாகுமரி ரயில் நிலையங்கள் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் சில ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுவதாகவும், சில ரயில்கள் மாற்று இடத்தில் இருந்தும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவத்துள்ளது.

நேற்று தெற்கு ரயில்வே இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,

”நாகர்கோவிலில் இருந்து காலை 7.50 மணிக்குப் புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (வண்டி எண்.16321), மறுமார்க்கமாக, கோவையில் இருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16322) இன்று (ஞாயிற்றுகிழமை) முதல் 27-ந்தேதி வரையில் ரத்துசெய்யப்படுகிறது.

இதேபோல, நாகர்கோவிலில் இருந்து காலை 7.50 மணிக்குப் புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16321) வரும் 28-ந்தேதி நாகர்கோவில் – நெல்லை இடையே பகுதியளவு ரத்துசெய்யப்பட்டு, அதற்கு மாற்றாக நெல்லையிலிருந்து காலை 9.15 மணிக்குப் புறப்பட்டு கோவை செல்லும். மேலும், கன்னியாகுமரியிலிருந்து மாலை 5.25 மணிக்குப் புறப்பட்டு அசாம் மாநிலம் திப்ருகார் செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் (22503) வரும் 25-ந்தேதி (நாளை) முதல் 28-ந்தேதி வரை கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையே பகுதியளவு ரத்து செய்யப்பட்டு, அதற்கு மாற்றாக திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 7.40 மணிக்குப் புறப்பட்டு திப்ருகார் செல்லும். 

சென்னை எழும்பூரில் இருந்து வரும் 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையில் காலை 9.45 மணிக்குப் புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.16127) ஒட்டன்சத்திரம் மற்றும் பழனி ரயில் நிறுத்தத்தில் கூடுதலாக நின்று செல்லும். மறுமார்க்கமாக, குருவாயூரில் இருந்து வரும் 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையில் இரவு 11.25 மணிக்குப் புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16128) ஒட்டன்சத்திரம் மற்றும் பழனி ரயில் நிறுத்தத்தில் கூடுதலாக நின்று செல்லும்.”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.