சென்னை

லங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற விமானம் சென்னைக்கே திரும்பியது.

வழக்கமாகச் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்குக் காலை 10.15 மணிக்கு ஒரு விமானம் புறப்பட்டுச் செல்லும்.  இவ்வாறு புறப்பட்டு செல்லும் விமானம் மீண்டும் பகல் 2 மணிக்குத் திரும்பி வந்து சேரும்.

சென்னையிலிருந்து நேற்று காலை 10.15 மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம் தாமதமாகக் காலை 10.50 மணிக்கு யாழ்ப்பாணத்திற்குப் புறப்பட்டுச் சென்றது. விமானத்தில் 25 பயணிகள்  இருந்தனர். இந்த விமானம் சென்ற போது யாழ்ப்பாணத்தில் மழையால் மோசமான வானிலை நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

விமானம் யாழ்ப்பாணத்தில் தரை இறங்க முடியாததால் மீண்டும் சென்னைக்குத் திரும்பியது. சென்னைக்கு வந்த பயணிகள் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று மீண்டும் யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.