சென்னை

மிழகத்தில் டிஎஸ்பி, உதவி ஆணையர்கள் 12 பேரை இடமாற்றி டிஜிபி டி.கே.ராஜேந்திரன்  உத்தரவிட்டுள்ளார்.

தமிழக காவல்துறையில்  உதவி ஆணையாளர்கள், டிஎஸ்பி உள்பட 12 பேரை இடம் மாற்றம் செய்து காவல்துறை டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சென்னையில் பணியாற்றி வந்த  உதவி ஆணையர் எஸ்.ராமசாமி, விழுப்புர டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையராக ஜெயகரன் சாமுவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதுபோல ,  அடையாறு போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையராக  ஆர்.ஹிட்லர் மாற்றப்பட்டுள்ளர். மயிலாப்பூர் போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையராக ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் டிஎஸ்பிகள் பலரும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.