தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சாலையோரத்தில் யானையை தொந்தரவு செய்த நபரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

போதையில் யானையை தொந்தரவு செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.

இதனையடுத்து அந்த நபரை தேடி வந்த வனத்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக, எட்டிக்குட்டை கிராமத்தை சேர்ந்த மீசை முருகேசன் என்பவரை வனத்துறை கைது செய்துள்ளது.