சில தங்களுக்கு முன் பெங்களுரில் டிவி நடிகை உல்ளிட்ட சிலர் போதை பொருள் கடத்துவதாக கைது செய்யப்படனர். அவர்களிடம் நடத்திய விசாரனையை அடுத்து பிரபல நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டர். ராகினியின் நண்பர் ரவி சங்கர் என்பவரும் கைதானார். தற்போது நடிகை சஞ்சனா கல்ராணி நேரில் ஆஜராகும்படி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
நடிகை ராகினி திவேதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவரது தகவல் அடிப்படையில் ஆப்பிரிக்கா நாட்டு வாலிபர் லோயம் பெப்பர் சம்பாவை(வயது 33) கைது செய்துள்ளனர்.


சூர்யா நடித்த சிங்கம்-2 பட பாணியில் ஆப்பிரிக்காவில் இருந்து போதை பொருட்களை கடத்திக் கொண்டு வந்து உள்ளூர் நபர்கள் மூலம் சப்ளை செய்து வந்திருக்கிறார் ரவிசங்கர். பிரபலங்கள் நடத்தும் பார்ட்டிகளுக்கு ரவி சங்கர் மூலம் போதைப்பொருட்களை ‘சப்ளையாகி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் இன்னும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.