திருச்சி

திருச்சி நகரில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளைத் தூர் வாரும்    பணிகள் நடந்து வருகின்றன.    இன்று இந்த பணிகளை நேரில் பார்வையிடத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திருச்சிக்கு வர உள்ளார்.

எனவே திருச்சியில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.  அதில் ஒன்றாக இன்று மற்றும் நாளை  திருச்சியில் டிரோன்கள் பறக்கத் தடை விதித்து ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.