சென்னை:
குடிசைவாழ் மக்களின் மறுகுடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வரைவுக்கொள்கை’ தமிழிலும் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மறுகுடியமர்வு வரைவுக் கொள்கை ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது தொடர்பாக விமர்சனம் எழுந்த நிலையில் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவுக்கொள்கை குறித்த கருத்துகளையும், பரிந்துரைகளையும் வரும் 27 ஆம் தேதிக்குள் மக்கள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது, மக்களை மறுகுடியமர்த்தும் முறை நேர்மையாக இருக்க வேண்டும் என்பதே வரைவு கொள்கையின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.