சென்னை:
மிழக அரசு வழங்கும் ‘டாக்டர் ராதாகிருஷ்ணன்’ விருதுக்கு, 385 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக இந்திய அரசாங்கம் கொண்டாடிக் கொண்டு வருகிறது. ஏனென்றால் அவர் ஆசிரியராக இருந்து பல்வேறு விதமான பணிகளில் சிறப்புற ஆற்றினார்.

அவரை பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் தமிழகத்திலும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும் வழங்கப்படும்.

இந்நிலையில், தமிழக அரசு வழங்கும் ‘டாக்டர் ராதாகிருஷ்ணன்’ விருதுக்கு, 385 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு சார்பிலான விருதுக்கு தமிழகத்தில் இருந்து ஒருவர் மட்டுமே தேர்வாகியுள்ளார்.