சென்னை: தலைவர்களை புழந்து பேச வேண்டாம்  என சட்டப்பேரவையில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக சட்டமன்ற உறுப்பினர்களை கண்டிப்புடன் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்டு 13ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறதுஇன்று வணிகவரி, பதிவுத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை  மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.  

அவையின் தொடக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், விதிஎண் 110ன் கீழ்  இலங்கை தமிழர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். அதன்படி, இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு, பணக்கொடை உயர்த்துதல்,  இலங்கை தமிழ் அகதிகளுக்கு ரூ.108 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் 3510 வீடுகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

முதல்வரின் அறிவிப்புக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும், விவாதத்தின்போது பல உறுப்பினர்கள் முதல்வர் ஸ்டாலின் உள்பட தலைவர்கள  புகழ்ந்து பேசி வருகின்றனர்.

இதற்கு தடை போடும் வகையில்,  சட்டப்பேரவையில் தலைவர்களை புகழ்ந்து பேச வேண்டாமென்றும் அவையினருக்கு வேண்டுகோள் விடுத்தார். அதாவது, சட்டமுன்வடிவு, கேள்வி நேரத்தில் தலைவர்களை புழந்து பேச வேண்டாம். நேரத்தின் அருமை கருதி அமைச்சர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் இந்த கட்டளையை பிறப்பிப்பதாக முதல்வர் தெரிவித்தார்.