சென்னை: நாளை கூடும் அதிமுக பொதுக்குழுவுக்கு போக வேண்டாம் என அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒற்றை தலைமை விவகாரம் முற்றியுள்ள நிலையில், நாளை அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூடுகிறது. தற்போதைய சூழிலில் எடப்பாடிக்கே பொதுக்குழுவி உறுப்பினர்கள் பெரும் ஆதரவு உள்ளது. இதனால், அதிமுக பொதுக் குழுவுக்கு செல்ல வேண்டாம் என பொதுக் குழு உறுப்பினர்களுக்கு  கட்சியிள் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.

நாளை கூடும் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி தரப்பினர் கட்சியின் தலைமையை கைப்பற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால், பொதுக்குழுவினர் ஒபிஎஸ் பங்கேற்பாரா என்பதும் சந்தேகத்துக்கு இடமாகி உள்ளது. ஆனால்,  திட்டமிட்டபடி நாளை பொதுக்குழு, செயற்குழு கூடுவதாக  எடப்பாடி தரப்பினர் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என அனைத்து பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு ஓபிஎஸ் தரப்பில் அவசர கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கரம் நீட்டி உள்ள நிலையில், ஓபிஎஸ் கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை எற்படுத்தி உள்ளது.