சென்னை:
ப்பந்த அடிப்படையில் 11 மாத காலத்திற்கு பணியாற்ற மருத்துவர்கள் தேவை என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் அமைந்துள்ள மாநகராட்சி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவைப்படும் லேப் டெக்னீசியன், மருந்தாளுநர், அலுவலக ஊழியர்கள் தேவைப்படும் பட்சத்தில் ஒப்பந்தம் அடிப்படையில் பணிநியனம் செய்யப்படுகிறது.

அதன்படி தற்போது மாநகராட்சி மருத்துவமனையில் மகப்பேறு நல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், பொது மருத்துவர் என 51 மருத்துவர்கள் ரூ.90 ஆயிரம் சம்பளத்தில் 11 மாத காலத்திற்கு பணியாற்ற மருத்துவர்கள் தேவை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும் www chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஜூலை 22ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் 27ம் தேதி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இந்த பணிக்கான நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.