டில்லி:

தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புளால் காங்கிரஸ் தொண்டர்கள் தங்களது நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரயங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் 17வது மக்களவைக்கான தேர்தல் கடந்த 19ந்தேதியுடன் முடிவடைந்தது. அதையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பாஜக ஆட்சியே அமையும் என தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் பரபரப்பு அடைந்துள்ள்ன. கட்சி தொண்டர்களும் சோர்வடைந்து உள்ளனர்.

இந்த நிலையில், கருத்துகணிப்புகளை கண்டு கட்சி தொண்டர்கள் யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம் என தமது கட்சி தொண்டர்களுக்கு உத்திர பிரதேச மாநில(கிழக்கு) காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி,  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை தம் கட்சி முகவர்கள் கண்கானித்து நியாமான தேர்தல் முடிவு வெளியாகிட உதவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.