சென்னை

வரும் 25 ஆம் தேதி  தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து திமுக போராட்டம் நடத்த உள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

குறிப்பாக,

“மதத்தின் பெயரால் பிற்போக்குச் சிந்தனையை தமிழகத்தில் விதைக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. அரசின் சதி திட்டத்தை முறியடிக்க பகுத்தறிவுப் பிரசாரம் மேற்கொள்வோம்,

மத்திய கல்வி மந்திரியின் ஆணவப் பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு தமிழ்நாட்டின் கல்வி நிதியை வழங்கும் வரையில் தமிழகம் முழுவதும் தொடர் மாணவர் போராட்டம்,

இந்தியை திணிக்கும் மத்திய அரசுக்கு எதிராக 25-ந்தேதி தமிழகம் முழுவதும் முற்றுகைப்போராட்டம்

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வரும்  25-ந்தேதி மத்திய அரசு நிறுவனங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்னும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.