சென்னை

மிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒரு இனத்தின் அடையாளம் தாய்மொழி எனத் தெரிவித்துள்ளார்.

இன்று உலகெங்கும் தாய்மொழி தினம் விமரிசையாக  கொண்டாடப்படுகிறது/  இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில்

“தாய்மொழி என்பது வெறும் தொடர்புக்குதவும் கருவி மட்டுமல்ல. ஓர் இனத்தின் அடையாளம், பண்பாடு, வரலாற்றின் அடித்தளம்.

தமிழைக் காக்க வேண்டும் என்ற நம் உணர்வுக்கும், இந்தியைத் திணிக்க வேண்டும் எனும் பாசிச சூழ்ச்சிக்கும் இதுவே அடிப்படை.

தமிழை வீழ்த்த வந்த சூழ்ச்சிகளை எல்லாம் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக தமிழ்நாடு வீழ்த்தியே வந்திருக்கிறது.

இனியும் வீழ்த்தும்.

“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் – இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே ” – எனும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரிகளுக்கு ஏற்ப ஒன்றுபட்டு நம் தமிழ் காப்போம்.

என்று பதிவிட்டுள்ளார்.