சென்னை:

நாங்குநேரி, விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுக தோற்கடிக்கப்படவேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசமாக கூறினார்.

தமிழகத்தில் காலியாக உள்ள  நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகள் உள்பட புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21 ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இதைத்தொடர்ந்து தேர்தல் பணிகளில் காங்கிரஸ், திமுக கூட்டணி தீவிரமாக இறங்கி உள்ளது. இந்த நிலையில், சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் செய்தி யாளர்களிடம் பேசிய முன்னாள் மத்தியஇணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நாங்குநேரி, விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுக தோற்கடிக்கப்படவேண்டும்  என்றார்.

மேலும்,  பாஜக- அதிமுக கூட்டணியில் இருக்கும் நிலையில், இடைத்தேர்தலில்  பாஜக போட்டியிடுவது குறித்து பாஜக மேலிடம்தான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.