மதுரை:  ஓ.பன்னீர்செல்வம் உள்பட மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை அரவணைக்க தயாராக இருக்கிறோம்  என அமைச்சர் மூர்த்தி அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  திமுக என்பது பாரம்பரிய இயக்கம் , அது ஆலமரத்தை போன்று வளர்ந்து கொண்டே இருக்கும் .  இந்தியாவிலேயே திமுகவோடு ஒப்பிட மாற்றுக்கட்சி என்பது இல்லை என கூறினார்.

தொடர்ந்து, அவரிடம் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஓரங்கட்டுப்பட்டு உள்ளது குறித்து  செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர், ஓபிஎஸ் திமுக-விற்கு வருவதும்  வராததும் அவரது சொந்த விருப்பம் என கூறிறவர், இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்து கொள்வார் என்றார்.

ஓ.பன்னீர்செல்வம் அல்ல எந்த கட்சியினர் திமுக-விற்கு வந்தாலும் அவர்களை அரவணைக்க தயாராக உள்ளோம் என்றும் மாற்றுக்கட்சியினர் திமுக-வில் இணைந்தால் நிச்சயமாக இணைத்து கொள்வோம் என்றும் தெரிவித்தார்.