அரியலுர்: நீட் தேர்வு எழுதி மாணவி, தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது குடும்பத்தினருக்கு திமுக ரூ.10 நிதி உதவி வழங்கி உள்ளது. உயிரிழந்த மாணவி கனிமொழியின் குடும்பத்திற்கு அமைச்சர் சிவசங்கர் திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

சேலம் மாவட்டத்தில் மாணவன் தனுஷ் நீட் தேர்வு எழுத பயந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவருக்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்ட நிலையில், இன்று திமுக சார்பில் தற்கொலை செய்த மாணவி கனிமொழி குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியை திமுக அளித்து உள்ளது.

மருத்துவ சேர்க்கைகான நீட் தேர்வு கடந்த 12 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகத்திலிருந்து 1.10 லட்சம் பேர் எழுதியிருந்தனர். நீட் தேர்வினை எழுதிய அரியலூரை சார்ந்த கனிமொழி என்ற மாணவி நீட் தேர்வு வினாத்தாள் கடினமாக இருப்பதாக புலிம்பிய நிலையில், நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். கனிமொழி தற்கொலை செய்ததற்கு காரணம், நீட் தேர்வில் தோல்வி பயம் என்று கனிமொழியின் தந்தை கருணாநிதி தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து,  நீட்தேர்வால் உயிரிழந்த மாணவி கனிமொழியின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறிய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கினார்.