சென்னை:

கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் உள்பட சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  முகக்கவசங்கள், சானிடைசர்கள் உள்பட நிவாரண பொருட்கள் வழங்கினார்.

இன்று காலை கொளத்தூர் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்த எதிர்க்கட்சித்தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அந்த தொகுதியில்பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், ஆட்டோ ஓட்டுநர்கள், குழந்தைகள் உள்பட பல்வேறு தரப்பினருக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், முகக்கவசங்கள், சானிடைசர்கள், நிதியுதவி வழங்கினார்.

இதுகுறித்து ஸ்டாலின் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  Corona ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் கொளத்தூர் தொகுதியிலுள்ள தூய்மைப் பணியாளர்கள், வெளிமாநிலத்தவர், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து, உணவு, உணவுப்பொருட்கள், பாதுகாப்பு உபகரணங்கள், நிதியுதவிகளை வழங்கினேன்.

உதவுவோம்! கொரோனாவை வெல்வோம்! என்று கூறி உள்ளார்.