சென்னை: செப்டம்பர் 15ந்தேதி முதல்வர் மற்றும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  திமுக முப்பெரும் விழா நடைபெறும் என திமுக தலைமைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

முதலமைச்சர், திமு கழகத் தலைவர் தலைமையில் “தி.மு.க. முப்பெரும் விழா” 15-09-2021 புதன்கிழமை, மாலை 5 மணியளவில், காணொலி காட்சி வாயிலாக சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக முப்பெரும் விழா வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி, புதன்கிழமை மாலை 5 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக சென்னை கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.

அப்போது மாவட்ட கழக செயலாளர், பொறுப்பாளர்கள் தங்கள் பகுதிகளில்  காணொலி காட்சி வாயிலாக விழாவை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.